முகப்பு
இந்தியா

‘போராடும் விவசாயிகள் முட்டாள்களா?’: மத்திய அரசுக்கு கமல்நாத் கண்டனம்

மத்திய அரசின் நடவடிக்கைகளால் விவசாயிகள் இன்னலில் உள்ளதாக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான கமல்நாத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்
பகிர்:

மத்திய அரசின் நடவடிக்கைகளால் விவசாயிகள் இன்னலில் உள்ளதாக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான கமல்நாத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த 13 நாள்களாக போராடி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைகளில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதுமான முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

வேளாண் சட்டங்களால் விவசாயிகள் இன்னல்களில் உள்ளதாகத் தெரிவித்த கமல்நாத், “போராடும் விவசாயிகள் முட்டாள்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது விவசாயிகளுக்கு அனைத்து தகவல்களும் தெரிந்திருக்கிறது” எனக் கமல்நாத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →