மகாராஷ்டிரத்தில் மேலும் 4,259 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,259 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,259 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,76,699 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 80 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 48,139 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், 3,949 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17,53,922 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், 73,542 பேர் மட்டுமே இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு குணமடைவோர் விகிதம் 93.46 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.57 சதவிகிதமாக உள்ளது.
Advertisement
மும்பை:
மும்பையில் மேலும் 680 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,90,030 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 10,965 பேர் பலியாகியுள்ளனர்.