புதுவையில் வாக்காளர்களைக் கவர்ந்த ரோபோ நிலா!
புதுச்சேரியில் ரோபோ நிலா வாக்காளர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்று வாக்காளர்களைக் கவர்ந்தது.
புதுச்சேரியில் ரோபோ நிலா வாக்காளர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்று வாக்காளர்களைக் கவர்ந்தது.
புதுச்சேரியில் இன்று நடைபெற்றுவரும் வாக்குப்பதிவின் போது வஉசி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்களை வரவேற்கத் தாவணி அணிவிக்கப்பட்டு, கையில் ரோஜா பூக்கள் நிரம்பிய தட்டோடு வாக்காளர்களை நிலா என்ற ரோபோ வரவேற்றது.
இந்த செயல் பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்தது. வாக்காளர்களை வரவேற்ற ரோபோ நிலா, வணக்கம், வாக்குச்சாவடிக்கு வரவேற்கிறோம்.
Advertisement
Advertisement
தயவு செய்து அமைதியாக வரிசையில் செல்லுங்கள். தயவு செய்து உங்களது வாக்காளர் அடையாள அட்டையைத் தயாராக வைத்து இருங்கள் என இனிமையான குரலில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் விடியோ வைரலாகி உள்ளது.
summary