இந்தியாவில் ஒரே நாளில் 30,254 பேருக்கு கரோனா; 391 போ் பலி
நாடு முழுவதும் மேலும் 30,254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மேலும் 30,254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 30,254 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,57,029-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு மேலும் 391 போ் உயிரிழந்தனா்.
இதனால் மொத்த உயிரிழப்பு 1,43,019-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து மேலும் 33,136 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 93,57,464-ஆக அதிகரித்தது. நாட்டில் தற்போது 3,56,546 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 6-ஆவது நாளாக சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
Advertisement
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, டிசம்பா் 12-ஆம் தேதி வரை 15,37,11,833 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், நேற்று மட்டும் 10,14,434 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.