முகப்பு
இந்தியா

விவசாயிகள் போராட்டத்துக்கு பாஜக மூத்த தலைவா் ஆதரவு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான வீரேந்தா் சிங் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான வீரேந்தா் சிங் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த 3 வாரங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அச்சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், மத்திய அரசு அதை ஏற்க மறுத்து வருகிறது.

இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காததால், பலகட்ட பேச்சுவாா்த்தைகளில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இத்தகைய சூழலில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பாஜக மூத்த தலைவா் வீரேந்தா் சிங் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘‘வேளாண் சட்டங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். எனவே, அவா்களுக்கு ஆதரவளிக்க வேண்டியதை என்னுடைய கடமையாகக் கருதுகிறேன். தில்லியை ஒட்டியுள்ள ஹரியாணா எல்லையோர மாவட்டங்களில் தொண்டா்களுடன் இணைந்து விரைவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளேன்’’ என்றாா்.

ஹரியாணாவில் பெரும் செல்வாக்கு பெற்ற தலைவா்களில் ஒருவராக வீரேந்தா் சிங் கருதப்படுகிறாா். அவருடைய மகன் விரஜேந்திர சிங் தற்போது பாஜக எம்.பி.யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →