முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 703 பேருக்கு கரோனா

​தில்லியில் புதிதாக 703 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் புதிதாக 703 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 703 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,24,118 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 850 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 6,07,494 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,502 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இன்றைய நிலவரப்படி 6,122 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

தில்லியில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.83 சதவிகிதமாக உள்ளது. கடந்த 10 நாள்களில் கிடைத்துள்ள தரவுகளின்படி இறப்பு விகிதம் 3.06 சதவிகிதமாக உள்ளது.

தில்லியில் இதுவரை மொத்தம் 84,93,400 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments