முகப்பு
தமிழ்நாடு

சவுக்கு சங்கர் ஆந்திரத்தில் கைது!

யூடியூபர் சவுக்கு சங்கரை ஆந்திரத்தில் கைது செய்த சென்னை தனிப்படை போலீஸார்!

Updated On : 8 ஏப்ரல், 2026 at 4:57 PM
யூடியூபர் சவுக்கு சங்கரை ஆந்திரத்தில் கைது செய்த சென்னை தனிப்படை போலீஸார்!
பகிர்:

ஆந்திர பிரதேசத்தில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் தொழிலதிபர் ஒருவரை மிரட்டி பணம் பறித்ததாகவும் மோசடி செய்ததாகவும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை சைதாப்பேட்டை மற்றும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

சவுக்கு சங்கருக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் அவரை மருத்துவ காரணங்களுக்காக ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு கடந்த மார்ச் 25 வரை 3 மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Advertisement

இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்ற சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறி விடியோக்களை வெளியிடுகிறார். காவல்ததுறை விசாரணை அதிகாரிகளையும் மிரட்டுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென காவல் துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் தொடர்புடைய யாரையும் சந்திக்கக் கூடாது சாட்சிகளை கலைக்கக்கூடாது. யாரைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் விடியோக்கள் வெளியிடக் கூடாது. இந்த நிபந்தனைகளை மீறிச் செயல்பட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என சவுக்கு சங்கருக்கு எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி உடன் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் முடிவடைந்தது. ஜாமீன் முடிந்ததும் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் சரணடையவில்லை என்றால் அவரை காவல்துறையினர் கைது செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை தனிப்படை போலீஸார் சவுக்கு சங்கரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தீவிரமாக தேடி வந்தது. மேலும் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, சென்னை காவல்துறைக்கு அவர் சவால் விட்டு பேசியதாகவும் கூறப்படுகிறது,

மருத்துவ காரணங்களுக்காக இடைக்காலப் பிணையில் வந்த சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற ஆணையை மதிக்காமல் சென்னை காவல் துறைக்கு சவால் விட்ட நிலையில், அவர் ஆந்திர பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் ஆந்திரத்திற்கு சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்தனர்.

மேலும் அவரை சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்று அதிகாரிகள் புதன்கிழமை(ஏப். 8) தெரிவித்தனர்.

summary

Savukku Sankar arrested in Andhra Pradesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments