இந்தியா

வேலைவாய்ப்பின்மையை சுட்டிக்காட்டி பக்கோடா சுட்ட மேற்கு வங்க காங்கிரஸ்

DIN

வேலைவாய்ப்பின்மையை விமர்சிக்கும் விதமாக மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பக்கோடா சுடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

நாட்டில் கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத அளவில் வேலைவாய்ப்பின்மை அதிகளவில் நிலவுவதாக குற்றம்சாட்டி மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பக்கோடா சுடும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். அப்போது பட்டம் உள்ளது வேலை இல்லை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதாரப் பின்னடைவு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பு போராட்டங்களில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT