ம.பியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அச்சம்
மத்தியப் பிரதேசத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்மா நகரில் சனிக்கிழமை மாலை பழைய விடுதி ஒன்றின் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.
இதில் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
Advertisement
இந்த சம்பவம் மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது. போலீஸார் மற்றும் நிர்வாக அதிகாரிகள் மீட்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கியுள்ளனர்.
விடுதிக்கு அருகிலுள்ள நிலத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவுகிறது.
summary