முகப்பு
இந்தியா

ம.பியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அச்சம்

மத்தியப் பிரதேசத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 2:20 PM
கோப்புப்படம்.
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்மா நகரில் சனிக்கிழமை மாலை பழைய விடுதி ஒன்றின் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.

இதில் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Advertisement

இந்த சம்பவம் மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது. போலீஸார் மற்றும் நிர்வாக அதிகாரிகள் மீட்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கியுள்ளனர்.

விடுதிக்கு அருகிலுள்ள நிலத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவுகிறது.

summary

A four-storey building of an old lodge collapsed in Kotma town in Anuppur district of Madhya Pradesh on Saturday evening, police said, adding that at least six people are feared trapped under debris.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments