முகப்பு
இந்தியா

சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர்-ஐ அமல்படுத்த விடமாட்டோம்: பீம் ஆர்மி தலைவர்

சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவற்றை அமல்படுத்த விடமாட்டோம் என பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆஸாத் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:55 PM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்த விடமாட்டோம் என பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆஸாத் தெரிவித்துள்ளார்.

சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர்-க்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் சிஏஏ மற்றும் என்பிஆர்-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மத்தியில் சந்திரசேகர் ஆசாத் பேசினார். அவர் பேசுகையில், 

"இந்தியாவில் சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சியை அமல்படுத்த நாங்கள் விடமாட்டோம். இது என்னுடைய சவால். நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். ஒரு சட்டம் நாட்டு நலனுக்கு எதிராக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு போராடுவதற்கான உரிமை உள்ளது" என்றார்.

மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசித்த ஆஸாத், தன்னுடன் இணையுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →