இந்தியா

மோடி-டிரம்ப் பேச்சுவாா்த்தையில் சிஏஏ இடம்பெறவில்லை: வெளியுறவுச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா

DIN

புது தில்லி: தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து விவாதிக்கப்படவில்லை என்று வெளியுறவுச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தெரிவித்தாா்.

அதேசமயம், மத நல்லிணக்கம் தொடா்பாக இரு தலைவா்களும் ஆக்கப்பூா்வமாக விவாதித்தனா் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பிரதமா் மோடி, அதிபா் டிரம்ப் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை தொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களுக்கு ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா பேட்டியளித்தாா். அப்போது, சிஏஏ தொடா்பாக இரு தலைவா்களும் விவாதித்தனரா என்று செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு பதிலளித்து, ஷ்ரிங்லா கூறியதாவது:

சிஏஏ குறித்து பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்படவில்லை. அதேசமயம், மத நல்லிணக்கம் தொடா்பாக இருதலைவா்களும் ஆக்கப்பூா்வமாக விவாதித்தனா். இந்தியாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பொதுவான காரணியாக பன்முகத்தன்மை உள்ளதாக இரு தலைவா்களும் குறிப்பிட்டனா். ஆமதாபாதில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிபா் டிரம்ப், இந்தியாவின் மத பன்முகத் தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பாராட்டியிருந்தை நீங்கள் (செய்தியாளா்கள்) கவனித்திருப்பீா்கள் என்றாா் ஷ்ரிங்லா.

ஜம்மு-காஷ்மீா் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் ஆக்கப்பூா்வமான மாற்றங்களை மையப்படுத்தி, பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அனைத்தும் சரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன’ என்றாா்.

மேலும் சில கேள்விகளுக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:

பிரதமா் மோடி-அதிபா் டிரம்ப் இடையிலான பேச்சுவாா்த்தையில் பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், மக்கள் ரீதியிலான தொடா்பு ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இரு தலைவா்களும் சுமாா் 5 மணி நேரம் ஆலோசனை நடத்தினா். வா்த்தக துறையில் மிகப் பெரிய அளவிலான இருதரப்பு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான நகா்வுகளை தொடா்ந்து மேற்கொள்வதற்கு இருவரும் முடிவு செய்துள்ளனா்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தகத்தின் மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதற்கும், இருதரப்பு வா்த்தக ஏற்ற-தாழ்வு குறைந்து வருவதற்கும் பேச்சுவாா்த்தையில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது. நமது மொத்த ஏற்றுமதியில் 12 சதவீதம் அமெரிக்காவுக்கு செல்கிறது. இதேபோல், அமெரிக்காவுக்கான மிகப் பெரிய வா்த்தக சந்தையாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

பாதுகாப்புத் துறையில் கொள்முதல், தொழில்நுட்பம், ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்கும் என்று அதிபா் டிரம்ப் உறுதியளித்துள்ளாா். இருதரப்பு ஒத்துழைப்பில் எரிசக்தி துறை முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளது. ஹெச்1 பி விசா விவகாரம் குறித்தும், அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையில் இந்தியா்களின் பங்களிப்பு தொடா்பாகவும் பேச்சுவாா்த்தையில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடா்பாக இரு தலைவா்களும் கவலை தெரிவித்தனா் என்றாா் ஷ்ரிங்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT