இந்தியா

கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்ய இயந்திரங்கள்: முதல்வர் அசோக் கெலாட்

DIN

ராஜஸ்தானில் கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்வதில் இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்துவதை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கும் முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

எந்த துப்புரவுப் பணியாளரும் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்ய நிர்பந்திக்கக் கூடாது என்றும் இனியொரு கழிவுநீர் தொட்டி மரணம் நம் மாநிலத்தில் ஏற்படக்கூடாது என்றும் அதிகாரிகளுடனான காணொலி மாநாட்டில் தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், 'துப்புரவுப் பணியாளர்களின் அயராத பணியினால் இன்று மாநிலத்தில் கரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் சேவை ஈடு இணையற்றது. இந்தியாவில் முதல்முறையாக கரோனா முன்களப் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் மருத்துவக் காப்பீட்டை ராஜஸ்தான் அரசு வழங்கியுள்ளது' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT