முகப்பு
இந்தியா

ராஜஸ்தான் எம்எல்ஏ-க்கள் தங்கியிருப்பதற்கும், ஹரியாணா அரசுக்கும் தொடர்பு இல்லை: முதல்வர் கட்டர்

​ராஜஸ்தான் எம்எல்ஏ-க்கள் ஹரியாணாவில் தங்கியிருப்பதற்கு, ஹரியாணா அரசுக்கும் எவ்விதப் பங்கும் இல்லை என அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
​ராஜஸ்தான் எம்எல்ஏ-க்கள் ஹரியாணாவில் தங்கியிருப்பதற்கு, ஹரியாணா அரசுக்கும் எவ்விதப் பங்கும் இல்லை என அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.
பகிர்:


ராஜஸ்தான் எம்எல்ஏ-க்கள் ஹரியாணாவில் தங்கியிருப்பதற்கு, ஹரியாணா அரசுக்கும் எவ்விதப் பங்கும் இல்லை என அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மனேசரிலுள்ள விடுதியில் தங்கியிருப்பது குறித்து ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டரிடம் கேள்வியெழுப்பட்டது. இதற்குப் பதிலளித்த கட்டர், "தனியார் விடுதிகளில் யார் வேண்டுமானாலும் தங்கலாம். இதில் ஹரியாணா அரசுக்கு எவ்விதப் பங்கும் இல்லை" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், தான் பாஜகவில் இணையப்போவதில்லை என சச்சின் பைலட் இன்று (புதன்கிழமை) காலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா இதுபற்றி தெரிவிக்கையில், "பாஜகவில் இணையப்போவதில்லையெனில், ஹரியாணா அரசின் பாதுகாப்பிலிருந்து வெளியேறி ஜெய்ப்பூர் திரும்ப வேண்டும்" என்று கூறினார்.

இந்த நிலையில், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →