இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி; 4 பேர் மாயம்

DIN

ஜம்மு - காஷ்மீரில் கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 

ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மோகன் லால் என்பவர் தனது குடும்பத்துடன் செவ்வாய்கிழமை காரில் செனானியை நோக்கி சென்றிருக்கிறார். ஆனால் அவரது தொலைபேசியை இரவு 8.45 மணிக்கு மேல் தொடர்புகொள்ள முடியவில்லை. இதுதொடர்பாக அவர்களது குடும்பத்தினர் ராம் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 

இதனிடையே ககோட் நுல்லா அருகே ஆற்றில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் மாயமான 4 பேரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பலத்த மழை காரணமாக ஆற்றில் 20 அடிக்கு மேல் நீரோட்டம் இருந்ததால் தேடும் பணியில் கடினம் ஏற்பட்டுள்ளதாக ராம் நகர் காவல் நிலைய அதிகாரி பரத்வாஜ் தெரிவித்துள்ளார். 

எனினும் அவர்களது கார் மீட்கப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT