இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

DIN

ஜம்மு-காஷ்மீா் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் இன்று காலை அத்துமீறித் தாக்குதல் நடத்தினா். 

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்தும், கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. 

அந்த வகையில் இன்று காலை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் பூஞ்ச் மாவட்டம், குவாஸ்பா பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசியும், சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டும் திடீரென தாக்குதல் நடத்தினா். 

இதையடுத்து, இந்திய ராணுவம் தரப்பிலும் பாகிஸ்தான் எல்லையை நோக்கி பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியத் தரப்பில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT