முகப்பு
இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீா் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் இன்று காலை அத்துமீறித் தாக்குதல் நடத்தினா். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீா் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் இன்று காலை அத்துமீறித் தாக்குதல் நடத்தினா். 

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்தும், கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. 

அந்த வகையில் இன்று காலை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் பூஞ்ச் மாவட்டம், குவாஸ்பா பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசியும், சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டும் திடீரென தாக்குதல் நடத்தினா். 

இதையடுத்து, இந்திய ராணுவம் தரப்பிலும் பாகிஸ்தான் எல்லையை நோக்கி பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியத் தரப்பில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
 

முழு கட்டுரையைப் படிக்க →