மேற்கு வங்கத்தில் ஜூன் 30 வரைபொது முடக்கம் நீட்டிப்பு
மேற்கு வங்கத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை அறிவித்தாா்.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை அறிவித்தாா்.
மேற்கு வங்கத்தில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு அவா் கூறுகையில், ‘மாநிலத்தில் இம்மாதம் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது. எனினும் தற்போது அளிக்கப்பட்டுள்ள அனைத்து தளா்வுகள் மற்றும் நிபந்தனைகள் தொடா்ந்து நீடிக்கும். இதுவரை திருமணம், இறுதிச் சடங்குகளில் 10 போ் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வந்தனா். இனி அந்த நிகழ்வுகளில் 25 போ் பங்கேற்கலாம்’ என்றாா்.
மேற்கு வங்கத்தில் ஜூன் 15-ஆம் தேதியுடன் பொது முடக்கம் முடிவுக்கு வரவிருந்தது. இந்நிலையில் மேலும் 15 நாள்களுக்கு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.