முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சம்: 3,607 பேருக்கு தொற்று உறுதி

மகாராஷ்டிரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று (வியாழக்கிழமை) மட்டும் புதிதாக 3,607 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:47 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று (வியாழக்கிழமை) மட்டும் புதிதாக 3,607 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலம் மகாராஷ்டிரம்தான். அங்கு கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, அங்கு புதிதாக 3,607 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 152 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 97,648 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.