ராஜஸ்தானில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் பலி:12 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு
ராஜஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ள நிலையில், 78 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ள நிலையில், 78 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை ராஜஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்த பாதிப்பு 12,772 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,847 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 3,32,424-ஐ எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், 1,53,106 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதே நேரத்தில் 1,69,798 பேர் நோயிலிருந்து குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் கரோனா தொற்று காரணமாக 9,520 பேர் பலியாகியுள்ளனர்.