இந்தியா

ராஜஸ்தானில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் பலி:12 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு

ANI

ராஜஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ள நிலையில், 78 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இதுவரை ராஜஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்த பாதிப்பு 12,772 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,847 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக உள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 3,32,424-ஐ எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், 1,53,106 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதே நேரத்தில் 1,69,798 பேர் நோயிலிருந்து குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் கரோனா தொற்று காரணமாக 9,520 பேர் பலியாகியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT