கர்நாடக முதல்வர் எடியூரப்பா 
இந்தியா

ஊழியரின் கணவருக்கு கரோனா: கர்நாடக முதல்வரின் வீட்டு அலுவலகம் மூடல்

ஊழியரின் கணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து   கர்நாடக முதல்வரின் வீட்டு அலுவலகம் கிருமிநாசினி தெளிப்பிற்காக மூடப்பட்டது.

IANS

பெங்களூரு: ஊழியரின் கணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து கர்நாடக முதல்வரின் வீட்டு அலுவலகம் கிருமிநாசினி தெளிப்பிற்காக மூடப்பட்டது.

இதுதொடர்பாக பெங்களூருவில் அமைந்திருக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீட்டில் செயல்படும் முதல்வர் அலுவலக மேற்பார்வை பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர் செய்தி நிருவனத்திடம் கூறியதாவது:

இங்கு பணியாற்றிய பெண் ஊழியரின் கணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதல்வரின் வீட்டு அலுவலகம் கிருமிநாசினி தெளிப்பிற்காக மூடப்பட்டது.

கணவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டவுடன் அந்த ஊழியர் இரு நாட்களாக அலுவலகம் வரவில்லை.

அத்துடன் அவரது பணியானது வெளியே உள்ள அவுட் போஸ்டில் மட்டும்தான் என்பதால், அவர் உள்ளே முதல்வரையோ அல்லது அவரைச் சந்திக்க வரும் அமைச்சர்களுடனோ தொடர்பு கொள்ள வழியில்லை.

இங்கு திட்டமிட்டிருந்த போலீஸ் அதிகாரிகளின் சந்திப்பு உட்பட முதல்வரின் பணிகள் யாவும், தற்போது மாநில சட்டப்பேரவை  அமைந்துள்ள விதான் சவுதா வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT