முகப்பு
இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: பொதுமக்கள் 4 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியல் 4 பொதுமக்கள் காயமடைந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியல் 4 பொதுமக்கள் காயமடைந்தனர். 

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ நிலைகள், கிராமங்களை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்துவது கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் பாரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.

சிறிய ரக ஆயுதங்கள், மோட்டாா் குண்டுகளைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. எனினும், இந்த மோதலில் 4 பொதுமக்கள் காயமடைந்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →