இந்தியா

ரியாத்தில் இருந்து திரும்பிய இரு பயணிகளிடம் ஆயிரம் கிராம் தங்கம் பறிமுதல்

DIN

ரியாத்தில் இருந்து திரும்பிய இரு பயணிகளிடம் இருந்து தில்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சுமார் ஆயிரம் கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

ரியாத்தில் இருந்து தில்லிக்கு வியாழக்கிழமை வந்தடைந்த 6இ-1838 விமானத்தில் இருந்து வெளியேறிய இரு இந்தியப் பயணிகளை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் இருந்து சுமார் ரூ.44 லட்சம் மதிப்புடைய 1050 கிராம் எடையுள்ள 9 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தில்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT