முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் கரோனாவுக்கு முதல் பலி 

தெலங்கானாவில் கரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 65 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:18 PM
பகிர்:

தெலங்கானாவில் கரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கரோனாவின் தாக்கத்தால் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழலை இந்தியா எதிா்கொண்டுள்ளது. இந்த நிலையில் தெலங்கானாவில் கரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் எல்டெலா ராஜேந்தர கூறுகையில், தெலங்கானாவில் கரோனாவுக்கு முதல் நபர் பலியானார். இன்று மட்டும் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் மொத்தம் 65 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் குணமடைந்தார் என்றார். இதனிடையே இந்தியாவில் கரோனாவுக்கு இதுவரை 918 பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →