இந்தியா

மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார் குடியரசுத் தலைவர்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களவையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

DIN

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களவையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவையை இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக பட்ஜெட் அமர்வின் இரண்டாம் அமர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கிய நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டது.

இதை அடுத்து மார்ச் 29 ஆம் தேதியுடன் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT