இந்தியா

தில்லியில் 24 மணி நேரத்தில் 20 பேர் பலி; கரோனா பாதிப்பு 8,000-ஐ நெருங்குகிறது

ANI


புது தில்லி: புது தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்த 20 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 359 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், நேற்று நள்ளிரவு வரையிலான 24 மணி நேரத்தில் புது தில்லியில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 20 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் தில்லியில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 359 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 7,998 ஆக உள்ளது.

நேற்று 346 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2858 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT