முகப்பு
செய்திகள்

ஹீட் ஸ்ட்ரோக் - அறிகுறிகள் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வெப்பத் தாக்குதல்(ஹீட் ஸ்ட்ரோக்) - அறிகுறிகளும் தீர்வுகளும்...

Updated On : 27 ஏப்ரல், 2026 at 2:29 PM
கோப்புப் படம் - ENS
பகிர்:

கோடை வெய்யிலினால் ஏற்படும் வெப்பத் தாக்குதல் (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிப்பின் அறிகுறிகளும் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும்...

கோடை வெப்பம் அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கோடை காலத்தில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெப்பத் தாக்குதல்(ஹீட் ஸ்ட்ரோக்) பாதிப்பு வர வாய்ப்பு அதிகமுள்ளது.

Advertisement

மனித உடலின் சராசரி வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும் (36.1 - 37.8°C). சுற்றுப்புற வெப்ப நிலை சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும் போது உடலில் வியர்வை வெளியேறுவது மற்றும் தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்வதன் மூலமாக அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி மனித உடல் சராசரி வெப்பநிலைக்கு வருகிறது.

இந்த கோடை வெய்யிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. நீர்ச்சத்து இருக்கும்பட்சத்தில் பாதிப்பு பெரிதாக இருப்பதில்லை.

அறிகுறிகள்

நீர்ச்சத்து இல்லாதபோது அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைவலி, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம் - அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல், மயக்கம், வலிப்பு, தோல் வறண்டு சூடாக சிவந்து காணப்படுதல், இதயத்துடிப்பு அதிகரிப்பது, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பொது இடங்களில் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவரை நிழல் பகுதியில் காற்றோட்டமான இடத்தில் அமர்த்தி தண்ணீர் அல்லது ஓஆர்எஸ் கரைசல் வழங்க வேண்டும். ஈரத்துணி கொண்டு உடலைத் துடைக்கலாம்.

பச்சிளம் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

வெப்ப இழப்பைத் தவிர்க்க 4 லிட்டா் வரை தண்ணீா் பருகியே ஆக வேண்டும்.

தண்ணீருடன் சோ்த்து இளநீா், மோா், பழச்சாறு ஆகியவற்றை அருந்தலாம்.

நீா்ச்சத்து இழப்புக்கான அறிகுறிகள் இருக்கும்போது ஓஆர்எஸ் உப்புச் சா்க்கரை கரைசல் பருக வேண்டும்.

செயற்கை குளிா்பானங்கள், மதுபானங்களை தவிா்க்க வேண்டும்.

பகல் 11 - 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு வெளியில் செல்ல நேர்ந்தால் தண்ணீர், குடை, ஓஆர்எஸ் கரைசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்,

இலகுவான தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

முடிந்தவரை காற்றோட்டமான பகுதிகளில் வசிக்க வேண்டும்.

summary

Heat stroke: Symptoms and prevention

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.