உ.பி - ம.பி எல்லையில் தடுப்புகளைத் தகர்த்த புலம்பெயர் தொழிலாளர்கள்
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் உள்ள உத்தரப் பிரதேசம் - மத்தியப் பிரதேசம் எல்லையில் உத்தரப் பிரதேசம் செல்வதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் காவல் துறையினரின் தடுப்புகளைத் தகர்த்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் உள்ள உத்தரப் பிரதேசம் - மத்தியப் பிரதேசம் எல்லையில் உத்தரப் பிரதேசம் செல்வதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் காவல் துறையினரின் தடுப்புகளைத் தகர்த்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் செல்வதற்காக எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் அந்த மாநில எல்லையில் கூடினர். இதனால், அங்கு காவல் துறையினர் தடுப்புகளை வைத்திருந்தனர். தங்களை மாநிலத்துக்குள் அனுமதிக்காததால், தடுப்புகளைத் தகர்த்ததாக புலம்பெயர் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுபற்றி தொழிலாளர் ஒருவர் தெரிவிக்கையில், "நாங்கள் நடந்தே வருகிறோம். காவல் துறையினர் நாங்கள் உத்தரப் பிரதேசத்துக்குச் செல்வதை அனுமதிக்க மறுக்கின்றனர். இங்கு உணவுக்கும், குடிநீருக்கும் எவ்வித ஏற்பாடுகளும் இல்லை" என்றார். மற்ற தொழிலாளர்களும் இதே கருத்தையே தெரிவித்தனர்.
முன்னதாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், மத்தியப் பிரதேச அரசு பேருந்து வசதியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிர எல்லையில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் எல்லையில் இறக்கிவிடுவதற்கு இந்த வசதியை ஏற்படுத்தியது மத்தியப் பிரதேச அரசு.