கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் விவரம்..
பிகார்:
பிகாரில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,326 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. சுமார் 475 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
ஒடிசா:
ஒடிசாவில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 876 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 220 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் மேலும் 140 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,342 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 133 ஆகவும் உள்ளது. இதுவரை 2,666 பேர் குணமடைந்துள்ளனர்.