இந்தியா

நாசிக் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 890 ஆனது

PTI


மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 890 ஆக உயர்ந்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் மாலேகான் நகரத்தைச் சேர்ந்த 11 பேரும், நாசிக் நகரத்தைச் சேர்ந்த 8 பேரும் ஆவார். மேலும் நான்கு பேர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். 

இந்த புதிய வழக்குகள் மூலம், வடக்கு மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 890 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த வழக்குகளில் 684 மாலேகானில் இருந்தும், 59 நாசிக்கிலிருந்தும், 111 மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பதிவாகியுள்ளன. வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

இதுவரை, மாலேகானில் 654 - 504 வரை நோயிலிருந்து மீண்டுள்ளனர். 46 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் 43 பேர் மாலேகானில் இருந்து பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் இன்று காவல்துறை குறைதீா் கூட்டம்

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மின் விபத்திலிருந்து ஊழியா்களைப் பாதுகாக்க ‘வோல்டேஜ் சென்சாா் டிடெக்டா்’ கருவி அறிமுகம்

SCROLL FOR NEXT