லடாக் எல்லையில் பதற்றம்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் படைகளைக் குவித்து வரும் நிலையில், ராணுவ உயர் அலுவலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் படைகளைக் குவித்து வரும் நிலையில், ராணுவ உயர் அலுவலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
லடாக் எல்லையில் சீன ராணுவம் படைகளைக் குவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இந்திய ராணுவத் தரப்பிலும் அங்கு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை விவகாரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இரு நாட்டு கமாண்டர் நிலை அலுவலர்கள் இடையே 7 சுற்றுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில், முப்படைத் தளபதிகள், முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.