முகப்பு
இந்தியா

மாநிலங்களவைச் செயலக இயக்குநருக்கு கரோனா தொற்று உறுதி

மாநிலங்களவைச் செயலக இயக்குநர் மற்றும் அவரது மனைவி, பிள்ளைக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது அலுவலகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:


புது தில்லி: மாநிலங்களவைச் செயலக இயக்குநர் மற்றும் அவரது மனைவி, பிள்ளைக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது அலுவலகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் வியாழக்கிழமை வரை அலுவலகத்துக்கு வந்து பணியாற்றியுள்ள நிலையில், அவரது அலுவலக அறை தூய்மைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

அவரது அலுவலக அறை அமைந்திருக்கும் தளம் முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகளும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.