குவகாத்தி: அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 4 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கோக்ரஜார் காவல்துறை கண்காணிப்பாளர் ராகேஷ் ரௌஷன் இது பற்றி கூறுகையில், கடை உரிமையாளர் நிர்மல் பால், அவரது மனைவி மற்றும் மூன்று மகள்களும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நிர்மல் பால், வங்கியிலிருந்து பெற்ற ரூ.25 - 30 லட்சம் கடனுக்கு உரிய தவணையை செலுத்த முடியாமல், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததால், குடும்பத்தினர் இந்த துயர முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாலின் மூத்த மகள் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டு கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.