முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் ஐந்து மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட பள்ளிகள்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆந்திர மாநிலத்தில் ஐந்து மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

Updated On : 2 நவம்பர், 2020 at 4:44 PM
ஆந்திரத்தில் ஐந்து மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட பள்ளிகள்
பகிர்:


அமராவதி: கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆந்திர மாநிலத்தில் ஐந்து மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து இன்று பள்ளிகள் தொடங்கின.

காலை 9.15 மணி முதல் மதியம் 1.45 மணி வரை மதிய உணவுடன் பள்ளிகள் இயங்கின. ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 16 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இடைவெளி விட்டு மாணவர்கள் அமரவைக்கப்பட்டனர்.

Advertisement

மாணவர்கள் பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு, உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் பள்ளியின் வேலை நாள்கள் 180 என்பதை உறுதி செய்யும் வகையில் 2020 - 21ஆம் கல்வியாண்டு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என 60 ஆயிரம் பள்ளிகள் உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.