அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்தியர்
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹைதராபாத்தைச் சேர்ந்த 37 வயது நபர் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்தியாஅமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்தியர்
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹைதராபாத்தைச் சேர்ந்த 37 வயது நபர் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஹைதராபாத்: அமெரிக்காவின் ஜார்ஜியாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹைதராபாத்தைச் சேர்ந்த 37 வயது நபர் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஜார்ஜியாவில் மளிகை கடை நடத்தி வந்த ஹைதராபாதின் சஞ்சல்குடா பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிப் மொஹியுதீன் சில நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், கொலை செய்யப்பட்டவரின் மனைவி, “அமெரிக்காவின் இந்திய தூதரகத்திடம், கொலைக்கான காரணங்களை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தனது கணவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக ஜார்ஜியாவுக்குச் செல்ல தனக்கும் அவரது மாமியார் ஆகியோருக்கும் அவசர விசா வழங்க ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மூலம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
முகமது ஆரிஃப் மொஹியுதீனின் மனைவி கூற்றுப்படி, அவர் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்தார், சுமார் 10 மாதங்களுக்கு முன்பு ஹைதராபாதிற்கு வந்துவிட்டு திரும்பினர்.
அவர் ஜார்ஜியாவில் ஒரு மளிகை கடையை நடத்தி வந்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை இரவு அவருடன் தொலைபேசியில் பேசியதாகவும், அவர் வீட்டிற்கு சென்றவுடன் திரும்ப அழைப்பதாக கூறினார்.
ஆனால் பின்னர் அவர் என் அழைப்புகளுக்கு பேசவோ பதிலளிக்கவோ இல்லை. பின்னர் நான் என் மைத்துனரை அழைத்தேன், ஜார்ஜியாவில் உள்ள அவர்களது நண்பர்கள் மூலம் என் கணவர் கொலை செய்யப்பட்டார் என்பதையும், காவலர்கள் அவரது உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதையும் அறிந்தேன், "என்று அவர் கூறினார்.