Bihar boat capsize: 1 dead, 10 missing 
இந்தியா

பிகாரில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 10 பேர் காணவில்லை

பிகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 10 பேர் காணாமல் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

IANS

பிகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 10 பேர் காணாமல் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

கோபால்பூர் தொகுதியில் உள்ள டின்டாங்கா கராரி கிராமத்தைச் சேர்ந்த குறைந்துது 100 பயணிகள் படகில் பயணித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆவார். 

டின்டாங்கா காட்டின் அருகில் நீரின் வேகம் சற்று அதிகமாக இருந்ததால் படகு நிலைதடுமாறி திடீரென தண்ணீரில் கவிழ்ந்துள்ளது என்று கோபால்பூர் காவல்நிலைய பொறுப்பாளர் மணி பஸ்வான் தெரிவித்துள்ளார். 

இதில் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பிற்காக நீந்தியுள்ளனர். 10 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஒரு பெண்ணின் சடலத்தை மீட்புத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மியான்மர் ராணுவத்தின் கொடூரத் தாக்குதல்! குழந்தைகள் உள்பட 40 பேர் பலி!

'ஒரு வழக்கறிஞருக்கே இந்த மனநிலை என்றால்...' - தலைமை நீதிபதி தாக்குதல் முயற்சிக்கு கார்கே கண்டனம்!

தங்கம் விலை 2வது முறையாக உயர்வு! ரூ. 91 ஆயிரத்தைக் கடந்தது!

இசை நிறுவனத்தைத் துவங்கிய ஐசரி கணேஷ்!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT