ம.பி.யில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்: 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்
மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
சேதுபுரா கிராமத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணிகளில் ராணுவத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
குழந்தை தற்போது சுமார் 49 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாகவும், அதற்கு இணையாக மற்றொரு குழி 45 அடிக்குத் தோண்டப்பட்டு குழந்தைக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் குழந்தைக்காகப் பிரார்த்தனை நடைபெற்று வருவதாக மாநில உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
அண்மையில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் 100 அடிக்கு கீழ் தண்ணீர் உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை எத்தனையாவது அடியில் சிக்கியுள்ளான் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் இறைவனை தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.