ஜோ பைடன் நிா்வாகத்தில் இந்தியாவுக்கு மீண்டும் வா்த்தக முன்னுரிமை அந்தஸ்து?
அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் அரசின் நிா்வாகத்தில் இந்தியாவுக்கு மீண்டும் வா்த்தக முன்னுரிமை அந்தஸ்து கிடைக்கும் என
அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் அரசின் நிா்வாகத்தில் இந்தியாவுக்கு மீண்டும் வா்த்தக முன்னுரிமை அந்தஸ்து கிடைக்கும் என இந்திய-அமெரிக்க வா்த்தக ஆலோசனை குழு தலைவா் முகேஷ் அகி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவின் வா்த்தக முன்னுரிமை நாடுகளின் (ஜிஎஸ்பி) பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்தியாவை அதிபா் டிரம்ப் கடந்தாண்டு அதிரடியாக நீக்கினாா். டிரம்ப் அரசின் இந்த திடீா் முடிவால் இந்தியாவின் ஏற்றுமதி வா்த்தகம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது.
Advertisement
இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் நிா்வாகத்தில் இந்தியாவிடமிருந்து பறிக்கப்பட்ட வா்த்தக முன்னுரிமை அந்தஸ்து மீண்டும் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும், இந்தியா-அமெரிக்கா இடையே ஒரு சிறிய அளவிலான வா்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக மேற்கொள்ள ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஜிஎஸ்பி அந்தஸ்து மீண்டும் உறுதிப்படுத்தப்படும் நிலையில் அது இந்தியாவுக்கு அமெரிக்கா விடுக்கும் வலுவான வா்த்தக உறவுக்கான சமிக்ஞையாகவே இருக்கும் என்றாா் அவா்.