இந்தியா

’தனிமனித ராணுவமாக செயல்பட்டுள்ளீர்கள்’: தேஜஸ்விக்கு மெகபூபா முப்தி வாழ்த்து

DIN

பிகார் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டதாக ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவிற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில்,  “வாழ்த்துக்கள் தேஜஸ்வி. பிளவுபடுத்தும் அரசியலுக்கு மாறாக பிகார் தேர்தலில் மக்களின் உண்மையான பிரச்னைகளை பேசி வாக்கு சேகரித்துள்ளீர்கள். தனிமனித ராணுவமாக இருந்தபோதும் நீங்கள் கடுமையாக சண்டையிட்டீர்கள்.” என முப்தி தெரிவித்துள்ளார்.

பிகாரில் நேற்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT