ஹிமாசல் விவசாயிகளின் கண்களுக்கு ஆப்பிள் போல தெரியும் தக்காளி 
இந்தியா

ஹிமாசல் விவசாயிகளின் கண்களுக்கு ஆப்பிள் போல தெரியும் தக்காளி

ஹிமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளின் கண்களுக்கு தாங்கள் விளைவித்த தக்காளி அனைத்தும் ஆப்பிளைப் போல ஜொலிக்கின்றன.

IANS


ஷிம்லா: ஹிமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளின் கண்களுக்கு தாங்கள் விளைவித்த தக்காளி அனைத்தும் ஆப்பிளைப் போல ஜொலிக்கின்றன.

காரணம்.. கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஏராளமான விவசாயிகள் காரீஃப் பருவ காலத்தில் தக்காளி நடவை தவிர்த்துவிட்டனர். சுமார் 35 - 40 சதவீத விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடாததால், வட இந்திய நகரங்களில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தற்போது, சண்டீகர் மற்றும் தில்லியில் உள்ள சில்லறை விற்பனை சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் 65 வரை விற்பனையாகிறது. இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு ஒரு கிலோ தக்காளி ரூ.20 - ரூ.25க்கு விற்பனையான நிலையில், தற்போது தக்காளியின் விலை இரண்டு மடங்கை விட அதிகமாக விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தக்காளி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சோலன் நகரில் ஒட்டுமொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஏராளமான விளைபொருள்கள் செடியிலேயே அழுகியும் கருகியும் போயின. இதனால், காரீஃப் பருவ காலத்தில் பல விவசாயிகள் வேளாண்மையில் ஈடுபடாததே, இந்த விலையேற்றத்துக்குக் காரணமாகிவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT