முகப்பு
இந்தியா

ராஜ்கோட் தீ விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

குஜராத், ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 நவம்பர், 2020 at 1:02 PM
பிரதமர் மோடி
பகிர்:

குஜராத், ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கரோனா மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் சிக்கி உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 

Advertisement

இந்நிலையில் குஜராத் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் தனது சுட்டுரை பக்கத்தில், 

ராஜ்கோட் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்' என்று பதிவிட்டுள்ளார். 

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.