இந்தியா

பிகாரில் ஜேடியு எம்எல்ஏ உதவியாளர் சுட்டுக் கொலை

DIN


கோபால்கஞ்ச்: பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி எம்எல்ஏ அமரேந்திர பாண்டேவின் உதவியாளர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

பிகார் மாநிலம் கோபால்கஞ்சியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அமரேந்திர பாண்டேவின் உதவியாளர் சனிக்கிழமை மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள காவல்துறையினர்,  வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிகாரில் ஆட்சி அமைந்த சில நாள்களிலேயே எம்எல்ஏவின் உதவியாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம்  மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT