தில்லியில் மேலும் 2,676 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 2,676 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 2,676 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,676 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,95,236 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 39 பேர் பலியாகியுள்ளனர், 2,997 பேர் குணமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,581 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 2,66,935 பேர் குணமடைந்துள்ளனர். 22,720 பேர் சிகிச்சை இன்னும் பெற்று வருகின்றனர்.
Advertisement
தில்லியில் இன்று 53,591 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 33,70,968 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.