முகப்பு
இந்தியா

தில்லியில் மேலும் 2,676 பேருக்கு கரோனா

​தில்லியில் புதிதாக 2,676 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 6 அக்டோபர், 2020 at 8:36 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM


தில்லியில் புதிதாக 2,676 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,676 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,95,236 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 39 பேர் பலியாகியுள்ளனர், 2,997 பேர் குணமடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,581 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 2,66,935 பேர் குணமடைந்துள்ளனர். 22,720 பேர் சிகிச்சை இன்னும் பெற்று வருகின்றனர்.

Advertisement

தில்லியில் இன்று 53,591 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 33,70,968 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.