ஆக்ராவில் பட்டாசு ஆலையில் தீவிபத்து: 2 பேர் பலி, 4 பேர் காயம்
ஆக்ராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:09 PM
ஆக்ராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.
உத்தரப் பிரதேசம், ஆக்ராவின் நியூ ஆசம் பாதா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு எட்டு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ரோஹகன் பிரமோத் கூறுகையில், விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை ஷாமேன் மன்சூரிக்கு சொந்தமானது. பணி நடந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Advertisement
எனினும், அனுமதி பெற்று பட்டாசு ஆலை இயங்கியதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றார்.