இந்தியா

ஆக்ராவில் பட்டாசு ஆலையில் தீவிபத்து: 2 பேர் பலி, 4 பேர் காயம்

DIN

ஆக்ராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.

உத்தரப் பிரதேசம், ஆக்ராவின் நியூ ஆசம் பாதா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு எட்டு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர். 

உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ரோஹகன் பிரமோத் கூறுகையில், விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை ஷாமேன் மன்சூரிக்கு சொந்தமானது. பணி நடந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

எனினும், அனுமதி பெற்று பட்டாசு ஆலை இயங்கியதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT