தெலங்கானாவில் மேலும் 948 பேருக்குத் தொற்று: 4 பேர் பலி
தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 948 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளன.
தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 948 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிதாக 948 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,23 லட்சமாக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 17,432 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 2,00,086 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 1,896 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,275-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த ஒரேநாளில் 26,027 சோதனைகள் செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை 38,56,530 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.