கர்நாடகத்தில் இன்று மேலும் 4,471 பேருக்கு கரோனா தொற்று
கர்நாடகத்தில் இன்று மேலும் 4,471 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:13 PM
கர்நாடகத்தில் இன்று மேலும் 4,471 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,471 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று மேலும் 52 பேர் பலியாகி உள்ளனர். இத்துடன் கரோனாவுக்கு இதுவரை 10,873 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனாவில் இருந்து 7,153 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,00,737 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement