பிரதமர் வேட்பாளராக இருந்த அருமைச் சகோதரர் ராகுல் காந்தி! - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் விலக்களிக்கப்பட்டிருக்கும்...
புதுக்கோட்டை : தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்றைய பிரசாரத்தில், ‘பிரதமர் வேட்பாளராக இருந்த அருமைச் சகோதரர் ராகுல் காந்தி’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று(ஏப். 11) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது :
“நான் ஏற்கெனவே பல முறை சொல்லியிருக்கிறேன் - ‘நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு’. மத்தியில் ‘இந்தியா கூட்டணி’ ஆட்சி அமைந்திருந்தால், நீட் தேர்வு தமிழகத்தில் இருந்திருக்காது. அதற்கான உறுதியை, பிரதமர் வேட்பாளராக இருந்த அருமைச் சகோதரர் ராகுல் காந்தியே பேசியிருக்கிறார்; பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.
Advertisement
ஆனால், கூட்டணி கட்சிகள் தயவுடன் ஆட்சியமைக்கிற பிரதமர் மோடியைப் பார்த்து, தமிழகத்துக்கு நீட் விலக்கு தாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமியால் கேட்க முடியுமா?
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நாங்கள் சட்டப்பூர்வமாகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.
கொள்கையை விற்றுப் பிழைக்கும் அவர்கள் கூட்டத்துக்கு, சுய மரியாதை உரிமைகளும் இருக்காது; மாநில உரிமைகளும் புரியாது” என்றார்.