தாராவியில் புதிதாக 14 பேருக்கு கரோனா
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 14 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 14 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை:
மும்பையில் புதிதாக 1,354 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 31 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மும்பையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,54,242 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,24,217 பேர் குணமடைந்துள்ளனர், 10,153 பேர் பலியாகியுள்ளனர். 18,984 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
தாராவி:
தாராவியில் புதிதாக 14 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,522 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், 3,066 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, 148 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.