முகப்பு
கிரிக்கெட்

அபிஷேக் சர்மா அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 220 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 11 ஏப்ரல் 2026, 6:17 pm IST
அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மா - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் விளையாடியது.

Advertisement

Advertisement

அபிஷேக் சர்மா அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 220 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அதிகபட்சமாக அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 28 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கிளாசன் 39 ரன்களும், டிராவிஸ் ஹெட் 38 ரன்களும் எடுத்தனர். கேப்டன் இஷான் கிஷன் 27 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷஷாங் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சேவியர் பார்ட்லெட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

summary

Batting first in their IPL match against Punjab Kings, Sunrisers Hyderabad scored 219 runs for the loss of 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.