வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்
சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 11 ஏப்ரல், 2026 at 5:48 PM
சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில் சிங்கப்பெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் நாளை (ஏப்ரல் 12) 1 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Updated On : 11 ஏப்ரல், 2026 at 5:50 PM