மும்பை: அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்தில் மூதாட்டி பலி
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடு குடியிருப்பின் 3 மற்றும் 7வது மாடி இடிந்து விழுந்ததில் 65 வயது முதியவர் உயிரிழந்தார். 5 படுகாயம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடு குடியிருப்பின் 3 மற்றும் 7வது மாடி இடிந்து விழுந்ததில் 65 வயது முதியவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிரத்தில் மும்பை நகரின் டோங்ரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3 மற்றும் 7வது மாடி திடீரென இடிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்று உயிரிழந்ததாக பிரஹன்மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது.