முகப்பு
இந்தியா

தாணேவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 1,590 பேருக்குத் தொற்று

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் புதிதாக 1,590 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
Maha: Thane district records 1,590 new COVID cases, 29 deaths
பகிர்:


மகாராஷ்டிராவின் தாணே மாவட்டத்தில் புதிதாக 1,590 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட பாதிப்பு நிலவரத்தில், 

இன்று மேலும் 1,590 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1,28,429 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக கல்யாணில் 30,054 ஆகவும், நவி மும்பை 27,112 ஆகவும் பதிவாகியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

தாணே நகரில் மொத்தம் 26,735 பேரும், மீரா பயாண்டரில் 13,149 ஆகவும், தாணே கிராமப்புறத்தில் 10,000 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளன.

மேலும், 29 பேர் உயிரிழந்த நிலையில் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 3,643ஐ எட்டியுள்ளது மீட்பு விகிதம் 86.71(1,11,362) ஆக பதிவாகியுள்ளது. இறப்பு விகிதம் 2.84 (3,643) ஆக உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.